தமிழகம் , திருநெல்வேலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நெல்லை நகரில் உள்ள சாப்டர் மேல் நிலை பள்ளியிலையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நூற்றாண்டு பழமை வாய்ந்த குறித்த பாடசாலையில் காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டது. அதன் போது ,மாணவர்கள் கழிப்பறைக்கு சென்ற வேளை , 6 மாணவர்கள் கழிப்பறைக்கு வெளியே காத்திருந்த வேளை கழிப்பறை சுவர் இடிந்து மாணவர்கள் மீது விழுந்துள்ளது.
அதன் போது , விஸ்வரஞ்சன் (வயது 13), அன்பழகன் (வயது 14) ஆகிய இரு மாணவர்களும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
மேலும் சஞ்சய் , பிரகாஷ் , அபுபக்கர் , இசக்கி ஆகிய நான்கு மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் நெல்லை அரச மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழந்த நிலையில் , மூன்று மாணவர்களும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பாடசாலையில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு , பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.
அதனை அடுத்து பாடசாலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் , வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments