Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, June 28

Pages

Breaking News

சகோதரனின் அடையாள அட்டையை பயன்படுத்தி மாணவியுடன் ஹோட்டலில் தங்கிய மாணவன் கைது!


தனது மூத்த சகோதரனின் அடையாள அட்டையை பயன்படுத்தி சக மாணவியுடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த மாணவன் கைது செய்யப்பட்டு நீதவானின் உத்தரவில் கண்டி - உடுநுவர சிறுவர் தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 
 
கம்பளை நகரில் உள்ள பிரபல்யமான பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனும் , மற்றுமொரு பிரபல மகளீர் பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவியும் கடந்த 08 மாத காலங்களாக காதலித்து வந்துள்ளனர், 
 
அந்நிலையில் கடந்த 19ஆம் திகதி மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக இருவரும் வீடுகளில் கூறிவிட்டு , நாவலப்பிட்டியாவில் உள்ள நீர் வீழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு மாலை வரை பொழுதை கழித்துள்ளனர். 
 
அதன் பின்னர் அங்கிருந்து நுவரெலியா சென்று , அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அறை ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கியுள்ளனர். சிறுவர்களுக்கு அறை வாடகைக்கு வழங்க மாட்டார்கள் என்பதனால்  , மாணவன் தனது மூத்த சகோதரனின் தேசிய அடையாள அட்டையை திருடி வந்து , அந்த அடையாள அட்டையை பயன்படுத்தி அறையை வாடகைக்கு பெற்று இரு மாணவர்களும் இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளனர். 
 
அறைவாடகை உள்ளிட்ட செலவுகளுக்காக மாணவனின் ஒன்லைன் வகுப்புக்களுக்காக , வீட்டில் வாங்கி கொடுத்திருந்த கையடக்க தொலைபேசியை 7ஆயிரம் ரூபாய்க்கு மாணவன் விற்று உள்ளான். 
 
அதேவேளை மேலதிக வகுப்புக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என மாணவியின் தாயார் , கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 
 
அந்நிலையில் , மாணவி இரண்டு நாட்கள் கழித்து , வீடு திரும்பிய நிலையில் , பொலிஸார் மாணவியிடம் விசாரணைகளை முன்னெடுத்த போதே மாணவி முழு விபரத்தையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 
 
அதனை அடுத்து மாணவியுடன் சென்ற மாணவனை கைது செய்த பொலிஸார் , கம்பளை நீதிமன்றில் முற்படுத்தினர். விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் , மாணவனை சிறுவர் நிலையத்தில் தடுத்து வைக்க உத்தரவிட்டதுடன் , மாணவியை வைத்திய பரிசோதனைக்காக கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்க உத்தரவிட்டார். 

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு

யாழ் பிரதிபொலிஸ் மா அதிபர் பதவியேற்பு

பலாலி சந்தையை விடுவியுங்கள்

செம்மணியில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட...

சமூக ஊடகங்கள் மூலம் அதிகரிக்கும் குற்றங்கள்

யாழ் . மாநகர சபையில் பெரும் அமளி - முதல்வரை வெளியேற விடாது த...

நல்லூர் பிரதேச சபையின் கன்னியமர்வு - உறுப்பினர்களுக்கு அமோக ...

வடமராட்சி கிழக்கில் கடல்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை - சட்ட...

யாழில். இ.போ.ச மற்றும் தனியார் இடையில் முரண் - செவ்வாய்க்கிழ...

வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டம்