பெற்றோல் ஏற்றி வந்த வாகனம் விபத்துக்கு உள்ளான வாகனத்தில் இருந்து பெற்றோலை வாளிகளில் ஏந்தியவர்களில் . திடீரென வாகனம் வெடித்து சிதறியதில் 62க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கரீபியன் கடல் பகுதி நாடான ஹைட்டியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெற்றோல் ஏற்றிவந்த வாகனம் விபத்துக்கு உள்ளாகி குடை சாய்ந்துள்ளது. அதனால் வாகனத்தில் இருந்து பெற்றோல் வெளியேறிக்கொண்டு இருந்துள்ளது.
அதனை கண்ணுற்ற பலர் வெளியேறும் பெற்றோலை தள்ளும்முள்ளு பட்டு , வாளிகளில் ஏந்தியுள்ளனர். அதன் போது திடீரென வாகனம் வெடித்து சிதறியுள்ளது.
வாகனம் வெடித்து சிதறியதால் , அங்கு பெற்றோல் ஏந்திக்கொண்டு இருந்தவர்கள் உள்ளிட்ட 62க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தள்ளனர்.
பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments