Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நல்லூரில் எரிவாயு இணைப்புக்குழாய் எரிவு!


யாழ்ப்பாணம் -  நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு - சிலிண்டரை இணைக்கும் குழாய் எரிந்த சம்பவம் ஒன்று இன்று  இடம்பெற்றுள்ளது.

நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஓரு வீட்டில் மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்புக்கு அருகில் குழாய் திடீரென தீப்பிடித்ததை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார்.

இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற வர்த்தக நிலையத்தினர் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையினால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையிலேயே நல்லூர் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்மை குறிப்பிடத்தக்கது.




No comments