Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

24மணி நேரத்தில் வடக்கு கடலில் 69 தமிழக மீனவர்கள் கைது!


யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை நேற்று 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டு இருந்தது. 

அத்துடன் மன்னார் கடற்பகுதியில் 12 மீனவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 


No comments