தலையில் தேங்காயால் அடித்த கணவனை மனைவி கத்தியால் குத்தியதில் கணவன் உயிரிழந்துள்ளார்.
நவகமுவ - ரணால பிரதேசத்தில் நேற்றைய தினம் இச்சம்பவம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , நவகமுவ , மொரகெட்டி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கணவன் ,மனைவியின் தலையில் தேங்காயால் தாக்கியுள்ளார். அதனை அடுத்து கோபமுற்ற மனைவி கத்தியால் கணவனை குத்தியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த கணவன் , மனைவியை அயலவர்கள் மீட்டு நவகமுவ வைத்திய சாலையில் அனுமதித்தனர். கணவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments