Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மனைவியை படுகொலை செய்தவர் 14 வருடங்களின் பின் கைது


மனைவியை கட்டையால் அடித்து கொடூரமாக அடித்து கொன்ற நபரை பொலிஸார் கைது செய்தனர்.

இக்கொலை 2007 ஆம் ஆண்டு இடம்பெற்றதுடன் 14 வருடங்களின் பின்னர் சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் 2007ஆம் ஆண்டு தலவாக்கலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் எனவும், அப்போது தலவாக்கலை வட்டகொட தோட்டத்தில் வசித்து வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு 49 வயது என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டது.

74 வயதுடைய சந்தேகநபர் எம்பிலிபிட்டிய துங்கம பிரதேசத்தில் 14 வருடங்களாக தங்கியிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று (22) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

No comments