Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 24

Pages

Breaking News

நைஜீரியாவிற்கு நாட்டின் வளங்களை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்


நைஜீரியாவிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளதாக ராஜபக்ஷ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் நாட்டிலுள்ள முக்கிய பகுதிகளை நைஜீரியாவிற்கு விற்க வேண்டியேற்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

சிறிகொத்தாவில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் இந்த நிலைமை தொடர்ந்தால் கடன் பெற்றுக்கொண்ட அனைத்து நாடுகளுக்கும் இலங்கையின் வளங்களை கொடுக்க வேண்டிய நிலையே ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே நாட்டில் தற்போது காணப்படும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும் என ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.