Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சியா?


பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக அபயராம விகாரையின் விகாராதிபதி, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நாரஹேன்பிடிய அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், 2022 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி அடிப்படையற்றது என கூறினார்.

மேலும் அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவு பெறும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகமாட்டார் என்றும் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்புத் தன்மையை சரி செய்யும் உபாயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments