Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாணவனை பிளாஸ்டிக் குழாயினால் அடித்த ஆசிரியர் விளக்கமறியல்!


க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவனை பிளாஸ்டிக் குழாயினால் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வியாங்கொடையிலுள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாலைநேர வகுப்புக்கு குறித்த மாணவன் வராமையினால் தொழிநுட்ப ஆசிரியர் மாணவனின் கை மற்றும் கால்களில் தாக்கியுள்ளார். இதனால் கை, கால்களில் காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாணவனின் பெற்றோர் வியாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளனர். இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments