புதுக்குடியிருப்பில் காணாமல் போன சிறுமி , மூன்று நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூங்கிலாறு வடக்கு , உடையார்கட்டை சேர்ந்த யோகராசா நிதர்சனா (வயது 12) எனும் சிறுமியை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது கல்வி நடவடிக்கைக்காக திருகோணமலையில் விடுதியொன்றில் தங்கி கற்று வருகிறார். அந்நிலையில் கடந்த 13ஆம் திகதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அந்நிலையில் 15ஆம் திகதி காணாமல் போயுள்ளார். சிறுமி காணாமல் போனமை தொடர்பில் , குடும்பத்தினரால் அன்றைய தினமே புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டாரின் கோழிகள் காணாமல் போன நிலையில் அவற்றை இன்றையதினம் தேடி சென்ற போது , சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments