Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

காதலிப்பதற்காக பொலிஸாக மாறிய இராணுவ சிப்பாய் கைது!


யுவதி ஒருவரை காதலிப்பதற்காக பிரதான பொலிஸ் பரிசோதகராக மாறிய இராணுவ சிப்பாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொலனறுவை சீப்புக்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

அப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை குறித்த நபர் , தன்னை பிரதான பொலிஸ் பரிசோதகர் என கூறி காதலித்து வந்த நிலையில், காதலர்கள் இடையில் பிரிவு ஏற்பட்டுள்ளது. 

அந்நிலையில் யுவதி, தனது காதலனுக்கு எதிராக பொலனறுவை வலய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

அதன் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர் தன்னை பிரதான பொலிஸ் பரிசோதகர் என கூறி ஏமாற்றிய விடயம்  தெரியவந்துள்ளது. 

அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , அவரிடமிருந்து , பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவிக்கான சின்னங்கள், சீருடைகள் என்பன மீட்கப்பட்டதுடன் , பிரதான பொலிஸ் பரிசோதகர் சீருடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன. 

அதேவேளை குறித்த நபர் இராணுவ சிப்பாய் எனவும் , அவர் சீப்புக்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பொலிசாரின் மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

No comments