கென்யாவில் திருமண நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு கிழக்கே உள்ள என்ஜியு ஆற்றில் உள்ள பாலத்தின் மீது வேகமாக ஓடும் தண்ணீருக்கு மத்தியில் பேருந்து கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் என்றும் விபத்தில் சிக்கியவர்களில் 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
No comments