Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கண்டியில் காஸ் அடுப்பு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


காஸ் அடுப்பு வெடித்து சிதறியதில் , எரிகாயங்களுக்கு உள்ளான குடும்ப பெண் , 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கண்டி பல்லேகல பகுதியில் வசித்து வரும் வில்கமுவ பகுதியை சேர்ந்த யு.கே.பிரியாங்கனி (வயது 51) என்பவரே உயிரிழந்துள்ளார். 
 
இவர் கடந்த டிசம்பர் 1ஆம் திகதி , உணவு தயாரிப்பில் ஈடுபட்டு இருந்த வேளை , காஸ் அடுப்பு வெடித்துள்ளது. அதனால் அவர் எரிகாயங்களுக்கு உள்ளானர். 
 
அதனை அடுத்து கண்டி தேசிய வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கு தொடர்ந்து 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments