Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மன்னார் கடலில் காணாமல் போன பருத்தித்துறை மீனவர்களின் சடலங்கள் மீட்பு!


மன்னார் - கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த இரு மீனவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. 

யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த துாண்டில் மீன்பிடி தொழிலாளர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோந்தைப்பிட்டி கடலில் சென்றுகொண்டிருந்த நிலையில்,  மீனவர் ஒருவர் படகிலிருந்து தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக கடலில் பாய்ந்த மற்றய மீனவரும் கடலில் இழுத்து செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் ஒரு மீனவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து மற்றைய மீனவர் தேடப்பட்டுவந்த நிலையில் இன்று காலை மன்னார் உப்பளம் கடற்கரையில் மற்றைய மீனவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

No comments