Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொரளையில் வானத்தை நோக்கி சுட்டு நகைக்கொள்ளை!


கோப்புப்படம் 

மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு , நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

பொரளை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
குறித்த பகுதியில் உள்ள நகைக்கடைக்கு , மோட்டார் சைக்கிளில்  , முகத்தினை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்தவாறு வந்த இரு கொள்ளையர்கள் , வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து , துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். 
 
சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவீர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments