கோப்புப்படம்
மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு , நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பொரளை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள நகைக்கடைக்கு , மோட்டார் சைக்கிளில் , முகத்தினை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்தவாறு வந்த இரு கொள்ளையர்கள் , வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து , துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவீர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments