தனிப்பட்ட தகராறில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலிகெதி தொலஹேன பிரதேசத்தில் நேற்று (22) மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கொட்டகொட, பம்பரந்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தலகஹகம, பெலிகைத்த வீடொன்றுக்கு அருகில் இருந்த நபர் ஒருவருடன் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போதே தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதுடன், அதன்போது மோதலில் ஈடுபட்ட நபர்களில் ஒரு நபரின் மகனும் இணைந்து, குறித்த நபரை தாக்கியுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments