Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அம்பாறையில் ஒரு சடலம் கரையொதுங்கியுள்ளது!


உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பொலிஸ்  பிரிவில்  இன்று (8) காலை குறித்த  சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து  ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் சடலம் மீட்கப்பட்ட மருதமுனை கடற்கரை  பகுதிக்கு  பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை   பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் குறித்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கடந்த வாரம் யாழ்ப்பாண கரையோர பிரதேசங்களில் 06 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. அவை எதுவும் ஒரு வார காலம் கடந்தும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன. அந்நிலையில் இன்றைய தினம் அம்பாறையில் ஒரு சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்த நிலையில் கரையொதிங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments