கிளிநொச்சியில் மர்ம பொருளை வீட்டில் வைத்து கிரைண்டரால் வெட்டிய போது அது வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.
கிளிநொச்சி உமையாள்புரம் சோலைநகர் பகுதியில் இன்றைய தினம் பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவரே உயிழந்துள்ளார். அவரது சகோதரனான சிவலிங்கம் நிலக்சன் (வயது 13) படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மர்ம பொருளை ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்து , அதனை கிரைண்டரால் (இரும்பு வெட்டுவதற்கு பயன்படுத்திடுவது) வெட்ட முற்பட்ட போதே அது வெடித்து சிதறியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை குறித்த வீட்டை சூழவுள்ள பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments