Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கிளிநொச்சியில் மர்ம பொருள் வெடித்ததில் இளைஞன் உயிரிழப்பு - சிறுவன் படுகாயம்!


கிளிநொச்சியில் மர்ம பொருளை வீட்டில் வைத்து கிரைண்டரால் வெட்டிய போது அது வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.

கிளிநொச்சி உமையாள்புரம் சோலைநகர் பகுதியில் இன்றைய தினம் பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவரே உயிழந்துள்ளார். அவரது சகோதரனான சிவலிங்கம் நிலக்சன் (வயது 13) படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மர்ம பொருளை ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்து , அதனை கிரைண்டரால் (இரும்பு வெட்டுவதற்கு பயன்படுத்திடுவது) வெட்ட முற்பட்ட போதே அது வெடித்து சிதறியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 , சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை குறித்த வீட்டை சூழவுள்ள பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


 




No comments