Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொலிஸ் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு!


பொலிஸ் நிலைய தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார். 

பொலிஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்தமையால் , நீதி கோரி அவரது உறவினர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
காலி மாவட்டம்  ஹூங்கம பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
 
போயா தினமான இன்றைய தினம் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தார் எனும் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பிரேமதிலக்க அமரவீர ஹூங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். 
 
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் ,பொலிஸ் நிலையத்தினுள் தடுப்புக்காவலில் வைத்திருந்த போது , அவர் மயக்கமடைந்துள்ளார். 
 
மயக்கமடைந்த நபரை , ரன்ன வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது , அவர் உயிரிழந்துள்ளார். 
 
போலீசாரின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நபர் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் ரன்ன பகுதியில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் மட்ட அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments