Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சங்கானையில் வீடு உடைத்து நகை திருட்டு!


யாழ்.சங்கானை - நிற்சாமம் சிலம்புபுளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த வீட்டில் உள்ளவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு, மாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்து வீட்டினை அவதானித்த போது கதவு உடைத்து நகை களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments