Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இந்திய பிரஜையின் சாரதி அனுமதிப்பத்திரம் கரையொதுங்கியுள்ளது!



இந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது. 

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் , ஆலம்பத்தூர் சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் (வயது 47)  என்பவரின் சாரதி அனுமதிப்பத்திரமே கரையொதுங்கிய நிலையில்  மீட்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் , யாழ்.மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி  சனிக்கிழமை வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளில் இரு சடலங்களும் , மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும், கடந்த  செவ்வாய்க்கிழமை மருதங்கேணி கடற்கரை பகுதியில் ஒரு சடலமும், கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை சாக்கோட்டை மற்றும் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியிலுமாக இதுவரை 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. 
 
குறித்த 06 சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments