மதுபோதையில் கடமையில் இருந்த தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டதாக , காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பணியிடை நீக்கம் செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மது போதையில் கடமையில் ஈடுபட்ட நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments