தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்வத்தை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் கரந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், மேல் மாகாண தெற்கு போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
No comments