Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மணல் கடத்தல் தொடர்பில் கிளிநொச்சியில் கடந்த ஆண்டு 610 வழக்குகள் தாக்கல்!

 


சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் நிபந்தனைகளை மீறிய விதத்தில் மணல் கொண்டு சென்றமை என்பவற்றுக்கு  எதிராக, கிளிநொச்சி மாவட்டத்தில் 610 வழக்குகள் கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக ஒரு கோடியே 98 இலட்சத்து 89,500 ரூபாய் ​அபராதம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அதேவேளை, 1,005 கியூப் மணல் அரசு உடமையாக்கப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பல்வேறு தரப்பினரும் தமது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments