இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (செவ்வாய்யக்கிழமை) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இவ்வாறு அவர் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சுசில் பிரேமஜயந்த கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
அண்மைக்காலமாக அரசாங்கத்தை விமர்சித்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments