Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, June 23

Pages

Breaking News

பரசூட்டில் பறந்த வெளிநாட்டவர் மரத்தில் சிக்கி விபத்து!


பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ள நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கலஹா – லுல்கந்துர பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரசூட் விளையாட்டில் குறித்த வெளிநாட்டு பிரஜை ஈடுபட்டு இருந்த வேளை,  ருலிமங்கொட பகுதியில் அதனை தரையிறக்கப்பட்ட போது, சுமார் 30 அடி உயரமான மரத்தில் சிக்கியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த வெளிநாட்டு பிரஜை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 35 வயதான ரஷ்ய பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.

கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்