டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளான்.
கொழும்பு – கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய லேன் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
டிக்டொக் காணொளியால் இரு குழுக்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், குறித்த சிறுவன் மேலும் இருவருடன் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு குழுவை சேர்ந்தவர்கள் சிறுவனை இலக்கு வைத்து தாக்கி விட்டு , கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments