Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் திருட்டில் ஈடுபட்ட வாழைச்சேனை வாசி உள்ளிட்ட மூவர் கைது!


வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு வந்து அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
 
அதேவேளை சந்தேக நபர் திருடிய அலைபேசிகளை விற்பனை செய்து கொடுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் சத்திரச்சந்தியில் உள்ள அலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி இரவு திருட்டு இடம்பெற்றது.
 
அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் விற்பனை நிலையத்தில் பெறப்பட்ட சிசிரிவி பதிவுகளில் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சந்தேக நபரை அடையாளம் கண்டு, நேற்றுமுன்தினம் வாழைச்சேனை சென்று சந்தேக நபரைக் கைது செய்தனர்.
 
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரால், திருடப்பட்ட அலைபேசிகளை விற்பனை செய்து கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் 6 அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
 
சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

No comments