ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் பயண கால அட்டவணை, ரயில் ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போராட்டத்தினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதனால் , வீடுகளுக்கு செல்ல முற்பட்ட பயணிகள் புகையிரதங்கள் இல்லாமையால் , தமது பயணத்தினை தொடர முடியாது அந்தரித்து காணப்பட்டனர்.
No comments