கொழும்பு – கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய லேன் பகுதியில் டிக்டொக் தகராறில் சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சிறுவர்களை ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரையில் தடுத்து வைக்க கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் 18 வயதிற்கு குறைந்தவர்கள் என்பதினால் அவர்களை மாகொல சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
No comments