ஒரு மாத கால பகுதிக்கு மேலாக கடிதங்களை உரியவர்களுக்கு விநியோகிக்காது தன் வசம் வைத்திருந்த தபால் ஊழியர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மாத்தளை உக்குவெல தபால் நிலையத்தில் சேவையாற்றும் குறித்த தபால் ஊழியர் , பலகடுவ பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வந்த கடிதங்களை உரியவர்களிடம் கையளிக்காது , தன் வசம் வைத்திருந்துள்ளார்.
இது தொடர்பில் அறிந்த மாத்தளை தபால் அத்தியட்சகர் அநுர ரத்நாயக்க உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த ஊழியரை சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளார்.
குறித்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வந்த நேர்முக தேர்வுகளுக்கான கடிதங்கள் , வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள் , ஓய்வூதியர்களுக்கு வந்த கடிதங்கள் என பல தரப்பட்ட முக்கிய கடிதங்களை இவர் உரியவர்களிடம் கையளிக்காது ஒரு மாத காலப்பகுதிக்கு மேலாக தன் வசம் வைத்திருந்துள்ளார்.
அதனால் பல இளையோர் நேர்முக தேர்வுக்கான வாய்ப்புக்களை தவறவிட்டு உள்ளதாகவும் , வங்கிகளில் இருந்து வந்த நகை அடகு தொடர்பான கடிதங்கள் கிடைக்கப்பெறாதமையால் , அவர்களின் நகைகள் ஏலத்துக்கு சென்றுள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
No comments