Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கடந்த வருடத்தில் 15 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றல்


2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து இலங்கை கடற்பரப்பிலும் சர்வதேச கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, ​​1,268 கிலோகிராம் அதிகமான ஹெரோயினுடன் வெளிநாட்டவர்கள் உட்பட 141 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 7,095 கிலோகிராம் கேரள கஞ்சா, 158 கிலோகிராம் ஐஸ் மற்றும் 88 கிலோகிராம் ஹஷிஸ் உடன் 327 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

No comments