சிவனொளி பாத மலை யாத்திரைக்கு வந்த நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிய நிலையில் படுகாயங்களுடன் டிக்கோயா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை நல்லதண்ணி தனியார் பேருந்து நிலையத்தில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார்.
அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து ஆபத்தான நிலையில் வரை நோயாளர் காவு வண்டி மூலம் மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments