Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

விறகு கட்டு வாங்கி வந்த பிள்ளைகளை அடித்து சித்திரவதை செய்த தந்தை கைது!


தான் கூறிய பொருட்களை மேலதிகமாக விறகு கட்டு ஒன்றை கடையில் வாங்கி வந்தமைக்காக , தனது இரு பிள்ளைகளையும் மரத்தில் கட்டி வைத்து அடித்ததுடன் , மிளகாய் தூள் தூவிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தந்தையின் சித்திரவதைக்கு உள்ளான 6 வயதான மகன் மற்றும் 7 வயதான மகளையும் பொலிஸார் மீட்டு, மருத்துவ சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஹட்டன் , குடாகம , சமகி மாவத்தையை சேர்ந்த குறித்த தந்தை , தனது மகனையும் மகளையும் நேற்றைய தினம் கடைக்கு அனுப்பி சில பொருட்களை வாங்கி வருமாறு பணித்துள்ளார். 

கடைக்கு சென்ற இரு பிள்ளைகளும் , தந்தை சொன்ன பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு , மேலதிகமாக ஒரு விறகு கட்டு ஒன்றினையும் வாங்கி வந்துள்ளனர்.

தான் சொன்ன பொருட்களுக்கு மேலதிகமாக பொருட்களை கொள்வனவு செய்து வந்தமையால் , ஆத்திமரமுற்ற தந்தை இரு பிள்ளைகளையும் மரத்தில் கட்டி வைத்து மூர்க்கத்தனமாக தாக்கி , மிளகாய் தூளும் தூவியுள்ளார். 

தந்தையின் சித்திரவதை தாங்காத பிள்ளைகள் இருவரும் அவல குரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் கூடி பிள்ளைகளை மீட்டு , ஹட்டன் பொலிஸாருக்கும் தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , தந்தையை கைது செய்ததுடன் , இரு சிறுவர்களையும் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். 

குறித்த தந்தை மதுவுக்கு அடிமையானவர் எனவும் , தினமும் மது போதையில் , தனது பிள்ளைகள் மற்றும் மனைவியை அடித்து சித்திரவதை புரிபவர் எனவும்  அயலவர்கள் பொலிஸாரிடம் முறையிட்டு உள்ளனர். 

குறித்த நபரை இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

No comments