Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முல்லைத்தீவில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்து ; இரு இளைஞர்கள் உயிரிழப்பு!




முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - டிப்பர் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கேப்பாபிலவு பிலாக்குடியிருப்பை சேர்ந்தவர்களான , கிருஷ்ணசாமி மாரிமுத்து (வயது 48) மற்றும் சூரியகுமார் ஹரிதாஸ் (வயது 17) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். 

புதுக்குடியிருப்பை சேர்ந்த சண்முகம் நிரோஜன் (வயது 17) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்த போது , எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதாகவும் , அதில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் எனவும் , படுகாயமடைந்த இளைஞனை அவ்விடத்தில் கூடியோர் மீட்டு நோயாளர் காவு வண்டி மூலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில்  அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments