Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொலிஸார் மீது குண்டை வீசி தப்ப முயன்ற இரட்டைக்கொலை சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை


தமிழகம் செங்கல் பட்டு பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரண்டு கொலை சந்தேக நபர்கள் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். 

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். 
 
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
 
செங்கல்பட்டு கே. தெரு பகுதியை சேர்ந்த அப்பு என அழைக்கப்படும் கார்த்திக் என்பவர் நேற்று இரவு வீட்டுக்கு அருகில் உள்ள தேநீர்க்கடையில் தேநீர் அருந்த சேர்ந போது , மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய கும்பல் தேநீர் கடை மீது நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்திய பின்னர் , கார்த்திக்கை சரமாரியாக வெட்டி , படுகொலை செய்த பின்னர் அவரின் முகத்தினையும் சிதைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். 
 
அங்கிருந்து தப்பி சென்ற குறித்த கும்பல் , செங்கல்பட்டு  மேட்டுத்தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரியான மகனான மகேஷ் என்பவரையும் வெட்டிப்படுகொலை செய்துள்ளனர். 
 
அரை மணிநேர இடைவெளியில் மூவர் அடங்கிய கும்பலால் இரட்டை படுகொலை செய்தமையால் செங்கல்பட்டு பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. 
 
சம்பவம் குறித்து செங்கல்பட்டு பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த கொலை சம்பவங்களின் பின்னணியில் பெண் உள்ளிட்ட நால்வர் தொடர்பு பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 
 
அந்நிலையில் பெண் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் பிரதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகி இருந்த இடத்தினை கண்டறிந்துள்ளனர். 
 
அவ்விடத்திற்கு பொலிஸார் விரைந்து , மறைந்திருந்த இரு சந்தேக நபர்களையும் சரணடையுமாறு பொலிஸார் பணித்துள்ளனர். அவ்வேளை இரு சந்தேக நபர்களும் பொலிஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி செல்ல முற்பட்டனர். 
 
சந்தேக நபர்கள் வீசிய நாட்டு வெடிகுண்டால் இரு பொலிஸார் காயமுற்றனர். சந்தேகநபர்கள் தப்பி செல்வதனை கண்ணுற்ற ஏனைய பொலிஸார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். 
 
உயிரிழந்த சந்தேக நபர்கள் இருவரும் , ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் , அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments