இரண்டு இடங்களில் விபத்துக்களை ஏற்படுத்தி , நால்வருக்கு காயங்களை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் , சாரதி பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை டொக்யார்ட் வீதியில் உள்ள மைதானத்திற்கு முன்பாக நடந்து சென்ற பாதசாரி மீது முச்சக்கர வண்டி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் பாதசாரி காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து தப்பித்த குறித்த முச்சக்கர வண்டி , பிரதான பேருந்து நிலையம் முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தின் போது முச்சக்கர வண்டி தடம்புரண்ட நிலையில் , அங்கிருந்தவர்கள் முச்சக்கர வண்டியினை தூக்கி நிமிர்த்தி விட்டுள்ளனர்.
அதன் பின்னர் அங்கிருந்து முச்சக்கர வண்டியில் தப்பியோடிய சாரதி , வேக கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் மின் கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
அதனை அடுத்து பொதுமக்கள் சாரதியை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments