போதைப்பொருட்கள் , ஆயுதங்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களுடன் , சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பெலவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிங்கப்பூர் பிரஜை ஒருவர் தங்கியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி இருந்தனர்.
அதன் போது வீட்டினுள் இருந்து, ஹாஷ் எண்ணெய் போதைப்பொருள், கேரள கஞ்சா 50 கிராம், ஹாஷ் எண்ணெய் தடவப்பட்ட பிளாஸ்டிக் குப்பிகள் மூன்று, மின்னணு தராசு, கஞ்சா புகையை இழுக்கும் இரண்டு உபகரணங்கள், ஜேர்மனியில் உற்பத்திச் செய்யப்பட்ட குவிநாசி என்றழைக்கப்படும் வாயு பிஸ்டல், இரும்பு தட்டுகள், கறுப்பு நிறத்திலான வில், அந்த வில்லுக்கு பயன்படுத்தப்படும் அம்புகள் 21 மற்றும் சிறிய வில் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதனை அடுத்து வீட்டில் தங்கியிருந்த சிங்கப்பூர் பிரஜையை கைது செய்து , தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments