Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, June 20

Pages

Breaking News

திருமண நிகழ்வில் மாமனாரின் கழுத்தை நெரித்து கொன்ற மருமகன்!


திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (16) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது மாமன் - மருமகனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மருமகன் ( மூத்த மகளின் கணவர்) மாமனாரின் கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார். 

உயிரிழந்தவர் லுனுகம்வெஹெர, படவிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.