இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னாருக்கும் , இரணைதீவுக்கும் இடையில் இராமேஸ்வரம் , தங்கச்சிமட பகுதியை சேர்ந்த 08 மீனவர்கள் விசைப் படகொன்றில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை , கடல் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , கிளிநொச்சி நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் ஊடாக கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments