மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 92 ஆக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 120 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் நிவாரண நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 87 பேர் தென்கிழக்கு மடகாஸ்கரில் உள்ள இகோங்கோ மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பேரிடர் நிவாரண நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை இந்த புயலால் வீதிகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன.
அத்துடன் 124,000 க்கும் அதிகமான மக்களின் வீடுகள் சேதமாகி அல்லது அழிவடைந்துள்ளதாகவும், சுமார் 30,000 பேர் இடம்பெயர்ந்து 108 இடங்களில் முகாமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments