Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அராலியில் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!


யாழ்ப்பாணம் அராலி தெற்கில் வீடொன்றில் புகுந்த திருடர்கள் சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடி சென்றுள்ளனர். 

குறித்த வீட்டில் வசிப்போர் நேற்றைய தினம் தமது உறவினர் வீடொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது , வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதனை கண்ணுற்று வீட்டினுள் சென்று பார்த்த போது , வீட்டினுள் பொருட்கள் சிதறி கிடந்துள்ளதுடன் , நகைகள் வைக்கப்பட்டு இருந்த அலுமாரியில் இருந்த பொருட்களும் சிதறி காணப்பட்டன. 

அலுமாரிக்குள் வைக்கப்பட்டு இருந்த 11 பவுண் தாலிக்கொடி ஒன்றரை பவுண் சங்கிலி என்பன களவாடப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் வீட்டாரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments