Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மூன்றாவது ரி-20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வி


இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியிலும், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

தர்மசாலா மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தசுன் சானக ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களையும் சந்திமால் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அவிஷ்கான் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ், ஹர்சல் பட்டேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களையும் தீபக் ஹூதா 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர மற்றும் சமீக கருணாரத்ன ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் இந்தியக் கிரிக்கெட் அணியின் மத்திய தரவரிசை வீரரான ஸ்ரேயஸ் ஐயர் தெரிவுசெய்யப்பட்டார்.

No comments