Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாணவிகளின் மலசல கூடத்தில் இரகசிய கமரா - தீவிர விசாரணையில் பொலிஸார்


கம்பஹா நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையத்தின் பெண்களுக்கான மலசல கூடத்தில்  நவீன தொழில்நுட்ப கமரா பொறுத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கல்வி நிலையத்தில் கற்கும் மாணவிகள் சிலர் மலசல கூடத்தில் கமரா பொருத்தப்பட்டுள்ளதை அவதானித்து அது தொடர்பில் தங்களது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கையடக்க தொலைபேசியிலோ அல்லது மடிக்கணினியிலோ அங்கு நடப்பதை நேரடியாகப் பார்க்கும் வகையில் கமரா பொறுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் கல்வி நிலையத்தின் உரிமையாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 10  பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். 

விசாரணைகளின் அடிப்படையில் கமராவை பொறுத்திய நபரை விரைவில் கைது செய்ய முடியும் என பொலிஸார் தெரிவித்தனர். 

No comments