பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தெமட்டகொட சமிந்தவின் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்ற பெண் ஒருவர், 20 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய குடு மேரி எனப்படும் மைக்கேல் எலிசபெத் மேரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 100 கிராம் 75 மில்லிகிராம் போதைப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
No comments