Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, June 2

Pages

Breaking News

ஏழாலை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் மீட்பு


ஏழாலை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் அநாதவராக காணப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். 

குறித்த ஆலயத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை முதல் மோட்டார் சைக்கிள் ஒன்று அநாதரவான நிலையில் காணப்படுவதாகவும் , சந்தேகத்துக்கு உரிய முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் , சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நிலையில் சனிக்கிழமை அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டு , பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் , மோட்டார் சைக்கிளில் உரிமையாளரை கண்டறிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.