குருநாகல் வில்பாவ குளத்தில் நீராடச் சென்ற நான்கு மாணவிகளில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு மாணவிகளே உயிரிழந்துள்ளனர்
நேற்று (15) மாலை வில்பாவ குளத்தில் பாடசாலை மாணவிகள் நால்வர் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். திடீரென நால்வரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
அதனை அவதானித்த பிரதேச வாசிகள் அவர்களை பிரதேசவாசிகள் மீட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த மூன்று மாணவிகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு சிறுமிகளின் சடலங்களும் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments