Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மனைவிக்கும் , மனைவியுடன் உறங்கியவருக்கும் தீ வைத்த கணவன் - ஒருவர் உயிரிழப்பு மற்றவர் படுகாயம்


மனைவியும் , பிற ஆணொருவரும் ஒன்றாக உறங்கிக்கொண்டு இருந்தவேளை கணவன் பெற்றோல் ஊற்றி இருவருக்கும் தீ வைத்துள்ளார். 

அதில் ஆண் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் மனைவி கடுமையான தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எம்பிலிப்பிட்டிய, பாணமுரே பிரதேசத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

நான்கு பிள்ளைகளின் தாயாரான 38 வயதான பெண் ,தனது கணவருடனான கருத்து முரண்பாடுகளை அடுத்து , பின்னவல பகுதியில் வாடகைக்கு வீடெடுத்தது தங்கி உள்ளார். 

அங்கு திருமணத்திற்கு அப்பால் வேறு ஒரு நபருடன் தொடர்பினை பேணி வந்துள்ளார். அதனை அறிந்த பெண்ணின் கணவன் நேற்றைய தினம் இரவு அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று , இருவரும் ஒன்றாக தூங்கிக்கொண்டிருந்த வேளை இருவர் மீதும் பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார். 

அதனை அறிந்த அயலவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற போதிலும் ஆண் சம்பவ இடத்திலையே தீயில் கருகி உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பெண் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments