கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தனது மகளின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று , வீடு திரும்பிய வேளை விபத்தில் சிக்கி தந்தை உயிரிழந்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட 29 ஆவது கிலோ மீற்றர் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற குறித்த விபத்தில் அக்மீமன பகுதியை சேர்ந்த 67 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
மகளின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற பின்னர் குடும்ப உறுப்பினர்கள் 08 பேர் வாகனத்தில் வீடு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளை கனரக வாகனத்துடன் இவர்கள் பயணித்த வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் தந்தை உயிரிழந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments